இங். நெருக்கடி
எனவே இங்கிலாந்து எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் அது இங்கிலாந்து அணிக்கு அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் அடுத்த 2 போட்டிகளில் வலுவான அணிகளான இந்தியா மற்றும் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
2 போட்டிகளில் வெற்றி
இங்கிலாந்து, இந்த 2 போட்டிகளில் ஒன்றில் தோற்று, அதேநேரத்தில் பாகிஸ்தான் அல்லது வங்கதேசம் ஆகிய இரண்டு அணிகளில் எந்த அணி அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெறுகிறதோ அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறி விடும். எனவே, கடுமையான சிக்கலில் இருக்கிறது இங்கிலாந்து.
பைனலில் யார்?
எனவே உலக கோப்பை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசி. அணிகளின் ஆதிக்கம்தான் அதிகம் உள்ளது. இறுதி போட்டியில் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. எந்தெந்த அணிகள் மோதும்? எந்த அணி கோப்பையை வெல்லும்? என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
பைனலில் இந்தியா
இந்நிலையில், இந்த உலக கோப்பை குறித்து பேசியுள்ள முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் கருத்து கூறியிருக்கிறார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் தான் இறுதி போட்டியில் மோதும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தொடர் வெற்றி
அவர் மேலும் கூறியிருப்பதாவது: நடப்பு சாம்பியன் ஆஸி. உலக கோப்பைக்கு முன்பு வரை பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால், உலக கோப்பை தொடரில் அபாரமாக ஆடிவருகிறது. இதுவரை 7 போட்டிகளில் ஆடி 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. அந்த அணி தோற்ற ஒரே போட்டி இந்தியாவுக்கு எதிரானதுதான். இந்தியாவிடம் மட்டுமே தோல்வி அடைந்தது என்றார்.