For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சைவச் சாப்பாடு இல்லாததால் மைதானத்தை விட்டு உணவு தேடி ஓடிய இஷாந்த் சர்மா, ரெய்னா!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியை இந்தியா நழுவ விட்ட சோகத்தில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு வந்தது முதல் சரியான சாப்பாடு கிடைக்கவில்ல என்ற பெரும் கவலையில் வீரர்கள் உள்ளனராம்.

அதிலும் பிரிஸ்பேன் 2வது டெஸ்ட் போட்டியின் 3வது நாளின்போது சைவச் சாப்பாடு கிடைக்காமல் இஷாந்த் சர்மா, சுரேஷ் ரெய்னா, டைரக்டர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் உணவு தேடி மைதானத்தை விட்டு வெளியேறிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குப் போய்ச் சேர்ந்த சில நாட்களிலேயே பில் ஹியூக்ஸ் என்ற இளம் வீரர் புவன்சர் பந்து தாக்கி உயிரிழந்த சம்பவத்தால் இந்திய வீரர்கள் சோகமடைந்தனர். இதனால் முதல் டெஸ்ட் போட்டி தள்ளி வைக்கப்பட்டு தாமதமாக தொடங்கியது.

சாப்பாட்டுச் சண்டை

சாப்பாட்டுச் சண்டை

இந்த நிலையில் தற்போது இந்திய வீரர்களுக்கும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே சாப்பாடு விவகாரத்தில் மோதல் வெடித்துள்ளது.

சைவ சாப்பாடு கிடைக்கவில்லை

சைவ சாப்பாடு கிடைக்கவில்லை

ஆஸ்திரேலியாவுக்கு வந்தது முதலே இந்திய வீரர்கள் சரியான சாப்பாடு கிடைக்காமல் அவதிப்படுகின்றனராம். இருப்பினும் ஹியூக்ஸ் மரணத்தால் ஆஸ்திரேலியாவில் நிலவி வந்த சோக மன நிலை காரணமாக சாப்பாடு பிரச்சினையை வெளிப்படையாக கிளப்பாமல் இருந்துள்ளனர். ஆனால் தற்போது தங்களுக்கு சரியான சாப்பாடு கிடைக்கவில்லை என்று புலம்ப ஆரம்பித்துள்ளனராம்.

வாக் அவுட் செய்த வீரர்கள்

வாக் அவுட் செய்த வீரர்கள்

குறிப்பாக பிரிஸ்பேன் 2வது டெஸ்ட் போட்டியின்போது சைவச் சாப்பாடு கிடைக்காத காரணத்தால் சாப்பிடாமல் வீரர்கள் எழுந்து சென்றது தெரிய வந்துள்ளது.

டென்ஷன் ஆன இஷாந்த், ரெய்னா, ரவி

டென்ஷன் ஆன இஷாந்த், ரெய்னா, ரவி

3வது நாள் ஆட்டத்தின்போது, மதியச் சாப்பாடு சாப்பிட இந்திய வீரர்கள் போனபோது அவர்களுக்கு அசைவச் சாப்பாடு மட்டுமே பரிமாறப்பட்டதாம். இதனால் சைவப் பிரியர்களான இஷாந்த் சர்மா, சுரேஷ் ரெய்னா, அணி இயக்குநர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் அதிருப்தி அடைந்தனர். இதனால் மதியச் சாப்பாட்டை சாப்பிடாமல் அங்கிருந்து வெளியேறினர். மைதானத்தை விட்டு வெளியே வந்த அவர்கள் வெளியில் சைவச் சாப்பாடு கிடைக்காமா என்று போய்ப் பார்த்துள்ளனராம்.

வெளியில் வைத்து சாப்பிட்ட கொடுமை

வெளியில் வைத்து சாப்பிட்ட கொடுமை

சைவச் சாப்பாடு கிடைத்து அதை வாங்கிக் கொண்டு வந்தபோது வெளியிலிருந்து வரவழைக்கப்படும் சாப்பாட்டை உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டனராம் ஆஸ்திரேலிய அதிகாரிகள். இதனால் வேறு வழியில்லாமல் சர்மாவும், ரெய்னாவும் வெளியில் வைத்தே சாப்பிட்டுள்ளனர்.

ஏன் இப்படி...!

ஏன் இப்படி...!

முதல் டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர்களுக்குத் தேவையான சாப்பாட்டைத் தர போதிய ஏற்பாட்டை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் செய்திருந்ததாம். அதாவது இந்திய சமையல்காரரையே ஏற்பாடு செய்து கொடுத்திருந்தனர். ஆனால் பிரிஸ்பேனில் அதைச் செய்யவில்லையாம். இதனால் சைவச் சாப்பாட்டுக்கு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாம்.

Story first published: Sunday, December 21, 2014, 14:51 [IST]
Other articles published on Dec 21, 2014
English summary
Barely two weeks after mutually sharing the grief of Phillip Hughes' death, Indian team's relations with Cricket Australia is turning sour as pacer Ishant Sharma left the Gabba at lunch on the third day, after finding that there was no vegetarian preparation in the menu. Apparently they have been unhappy with the food provided to the visitors ever since they landed here. Two Indian players Ishant Sharma and Suresh Raina complained about the same. They then proceeded outside the stadium premises to procure proper vegetarian food for themselves, accompanied by ICC's ACSU personnel and team director Ravi Shastri.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X