கிம்பர்லே: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருதினப் போட்டியில் இந்தியா 2-0 என்று முன்னிலையில் இருக்க, மகளிர் அணியும் தனது முதல் ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் விளையாட தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான ஆடவர் அணி முதல் 2 ஒருதினப் போட்டிகளிலும் வென்று 2-0 என முன்னிலையில் உள்ளது. நாளை மூன்றாவது போட்டி நடக்க உள்ளது.