டெல்லி: டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் படுதோல்வியுற்றுள்ள இந்திய அணி மீது கடும் அதிருப்தியுடன் இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம், ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டி வரை டோணியை தக்க வைத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளது.டுவென்டி 20 போட்டியில் மிகவும் மோசமாக ஆடிய இந்திய அணிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் கோபம் அடைந்துள்ளது. இதனால் கேப்டன் டோணி நீக்கப்படலாம் என்று எதிபாப்பு நிலவுகிறது. இருப்பினும் இதை வாரியம் மறுத்துள்ளது. இது குறித்து வாரியத் தரப்பில் கூறுகையில், யாரயும் நீக்கும் திட்டம் இப்போது இல்லை. இருப்பினும் அடுத்த போட்டி தொடரின்போது அணைத்து வீரர்களும் தங்களது உடல் திறனை நிரூபிக்க வேண்டும் என்றனர்.அனால் இலங்கையில் நடைபெறவுள்ள ஆசியா கோப்பை போட்டி தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்லாவிட்டால் தோனியின் பதவி பறிக்கப்படும் என தெரிகிறது.