மெல்போர்ன்: உலகக் கோப்பையை வெல்லப் போவது இந்தியாதான். ஜெயிக்கவே வந்திருக்கிறோம். கோப்பையோடுதான் திரும்புவோம் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
உலகக் கோப்பைக் காலிறுதிப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இன்று நடக்கும் முதல் போட்டியில் இலங்கையும், தென் ஆப்பிரிக்காவும் மோதுகின்றன. நாளைய போட்டியில் இந்தியாவும், வங்கதேசமும் மோதவுள்ளன.
இந்த நிலையில் நாளைய போட்டி குறித்தும், உலகக் கோப்பையை வெல்வது குறித்தும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் ரெய்னா.
