
பேட்டிங் வரிசை மோசம்
கேப்டன் விராட் கோஹ்லி மட்டுமே 149 மற்றும் 51 ரன்கள் எடுத்தார். வேறு எந்த வீரரும் அரை சதத்தை எட்டவில்லை. அதனால் இன்று துவங்கும் போட்டியில் பேட்டிங் வரிசையை வலுப்படுத்துவதே கோஹ்லியின் முக்கிய வேலையாக இருக்கும்.

புஜாரா சேர்க்கப்படுவாரா
துவக்க ஆட்டக்காரரான ஷிகார் தவான் ரன் எடுக்கத் திணறுகிறார். அதனால், இன்றைய போட்டியில் தவானுக்கு பதிலாக புஜாரா இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தபட்சத்தில் கேஎல் ராகுல் துவக்க ஆட்டக்காரராக களமிறங்குவார்.

ஜடேஜாவா குல்தீப்பா
லார்ட்ஸ் மைதானம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பட்சத்தில் அஸ்வினுடன் இரண்டாவது சுழற்பந்து வீச்சாளர் அணியில் இடம்பெறும் வாய்ப்பு உள்ளது. 2014ல் இந்த மைதானத்தில் 3 விக்கெட் வீழ்த்தியுதுடன், பேட்டிங்கிலும் கலக்கிய ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுகிறது. இதுவரை கோஹ்லி தலைமையில் 36 டெஸ்ட்களிலும் இந்திய அணி, வெவ்வெறு வீரர்களுடன் களமிறங்கியுள்ளது.

தயாராக இங்கிலாந்து
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் வென்ற இங்கிலாந்து அணியில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. டேவிட் மாலன் அணியில் இல்லை. வழக்கு விசாரணையால் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார். அவர்களுக்கு பதிலாக மோயின் அலியுடன், 20 வயதாகும் அறிமுக வீரர் ஆலிவர் போப்பும் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











