மும்பை: இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை ஏற்கனவே வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மும்பையில் நாளை நடக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியை சீக்கிரமாக வெற்றியுடன் முடித்துவிடும். காரணம் - விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மாவின் ரிசப்ஷனில் அவர்கள் பங்கேற்க வேண்டும்.
இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்று வென்றது. அடுத்து நடைபெற்ற ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கி்ல் வென்றது.
