
தீபக் ஹூடா
அதே சமயத்தில் வேகப்பந்து வீச்சுக்கு நல்ல ஒத்துழைப்பு இருந்ததையும் காண முடிந்தது. எனவே இந்த ஆட்டத்திற்கு ஏழாவது இடத்தில் ஒரு ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர் வேண்டுமா? இல்லை பேட்டிங் ஸ்பின் ஆல்ரவுண்டர் வேண்டுமா? என்றால், இரண்டாவது ஆப்ஷன் தான் சரியானதாக இருக்கும். எனவே அக்சர் படேல் பதிலாக தீபக் ஹூடா கொண்டுவரப்பட்டால் அது சரியான முடிவுதான்

அஸ்வின் முக்கியம்
தென்ஆப்பிரிக்க அணியின் பெரிய பலம் மூன்று இடதுகை பேட்ஸ்மேன்கள்தான். எனவே அணியில் ஆப் ஸ்பின் அஸ்வின் இருக்கும்பொழுது, பார்ட் டைம் ஆப் ஸ்பின் தீபக் ஹூடா வருவது தவறான ஒன்றாக அமையாது.மேலும் பெர்த் மைதானத்தில் விளையாடும் பொழுது தென் ஆப்பிரிக்கா அணி , இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை எடுத்துக்கொண்டு வந்து விளையாடுவது கடினம்தான்.

4 வேகப்பந்துவீச்சாளர்கள்
நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற அதிக வாய்ப்பு உண்டு. மார்க்கோ யான்சன் கொண்டு வரப்படலாம். எனவே பேட்டிங்கில் ஏழாவது இடத்தில் ஒரு பியூர் பேட்ஸ்மேன் இருப்பது இந்திய அணிக்கு முக்கியமானது.இதனால் பிளேயிங் லெவனில் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்கு ரோகித் தள்ளப்பட்டுள்ளார்.

ரோகித் குழப்பம்
ஆனால் நெதர்லாந்துக்கு எதிராக அக்சர் பட்டேல் சிறப்பாக செயல்பட்டார். இதனால், அவரை நீக்கினால், அது அவரது உத்வேகத்தை குலைக்கலாம் என கருதப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2011 உலககோப்பையில் நடந்தது போல் , தற்போதும் நடப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அப்படி பார்த்தால், கடந்த முறை தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











