சென்னை: இந்தியாவை முடக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையையும் படு பர்பெக்ட் ஆக செய்து, அதை ஒரு இம்மி கூட அதிலிருந்து அவர்கள் பிசகவில்லை. ஆனால் இந்தியா என்ன செய்தது... தென் ஆப்பிரிக்காவுக்கு இருந்த அந்த உணர்வு, வேகம், துடிப்பு கூட சற்றும் இல்லாமல் போய் விட்டது இந்தியாவிடம்.
பேய்த்தனமாக, வெறித்தனமாக ஆடியிருக்க வேண்டிய ஒரு போட்டியை, உத்வேகத்துடன் நடத்தியிருக்க வேண்டிய ஒரு சேஸிங்கை ஏதோ ஜஸ்ட் லைக் தட் போல இந்தியா நடத்தியது ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கி விட்டது.

இந்தியா இந்தப் போட்டியில் செய்த தவறுகள் நிறைய...
முதல் முறையாக இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா அவுட்டாகியுள்ளது... அது அதன் வெளியேற்றமாக அமைந்து ரசிகர்களை வேதனைப்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா அன்று வெறியுடன் ஆடியதே, வேங்கையாக போராடியதே, அதற்கு பதிலடியாக நியூசிலாந்து வெறி கொண்டு ஆடியதே.... அதுதான் ஆட்டம்.. அதுதான் வேகம்.. அதுதான் ரசிகர்கள் எதிர்பார்த்ததும் கூட.. ஆனால் டோணி அன் கோவின் சேஸிங்கை எந்த வகையிலும் சேர்க்க முடியவில்லை...!