
287 ரன்கள் சேர்த்தது
முதல் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் என்ற நிலையில் இங்கிலாந்து இருந்தது. இரண்டாவது நாளான நேற்று மேலும் 2 ரன்களை எடுத்து, 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

சுருண்டது இங்கிலாந்து
ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து 287 ரன்களுக்கு சுருண்டது. 71 ரன்களை சேர்ப்பதற்குள் 7 விக்கெட்களை இங்கிலாந்து இழந்தது.

ஏமாற்றிய பேட்டிங் வரிசை
அதைத் தொடர்ந்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸை துவக்கியது. துவக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய், ஷிகார் தவன் நல்ல துவக்கத்தை தந்தனர். அவர்கள் நிலைத்து ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முரளி விஜய் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தவான் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ராகுல் 4, ரஹானே 15, தினேக் கார்த்திக் 0 என அனைவரும் ஏமாற்றினர்.

கோஹ்லி அபாரம்
இந்த நிலையில், கேப்டன் விராட் கோஹ்லி நிதானமாக விளையாடினார். அவர் 149 ரன்கள் எடுத்த நிலையில் கடைசியாக ஆட்டமிழந்தார். இங்கிலாந்தில் கடந்த 2014ல் மொத்தமாக 134 ரன்கள் மட்டுமே எடுத்த கோஹ்லி, இந்த இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி, இங்கிலாந்து மண்ணில் முதல் சதத்தை அடித்தார். இறுதியில் இந்தியா 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்தின் சாம் குர்ரான் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து, 2வது நாள் ஆட்ட நேர இறுதியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. 22 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து உள்ளது.


Click it and Unblock the Notifications











