சென்னை: நடப்பு உலக கோப்பையின், முதல் ஆறு போட்டிகளிலும், 60 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது இந்தியா. விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற உற்சாகத்திலும் மிதக்கின்றனர் இந்திய ரசிகர்கள்.

எனவே, இஷ்டத்துக்கு மீம்ஸ் உருவாக்கி மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர் இந்திய ரசிகர்கள்.
இந்த மீம்ஸ் அதில் கலக்கலாக உள்ளது. கரகாட்டக்காரன் படத்தில், உன்னை எத்தனை வாழைப்பழம் வாங்கிவரச் சொன்னேன் என்று கவுண்டமணி கேரக்டர் பேசுவதும், பதிலுக்கு செந்தில் கேரக்டர், ரெண்டு வாழைப்பழம் என்று சொல்வதும் பிரசித்தி பெற்ற காமெடியாகும்.
ஏனெனில் செந்தில், ஒரு வாழைப்பழத்தை மட்டும்தான் கவுண்டமணியிடம் கொடுத்திருப்பார். மற்றொரு பழத்தை சாப்பிட்டுவிட்டு, அதை மறைக்க கவுண்டமணியை 'சதாய்ப்பார்'.
ஏற்கனவே, இந்த தொடரில், இந்தியாவிடம் ஆல் அவுட் ஆன அணிகள், கடைசி லீக்கில் மோதிய ஜிம்பாப்வேயிடமும், ஆல் அவுட் ஆகிவிடக் கூடாது என்று சொல்லி அனுப்பி வைத்தது போலவும், ஆனால் அந்த அணி இப்படி பரிதாபமாக ஆல்அவுட் ஆனதாகவும் கலாய்க்கின்றனர் நெட்டிசன்கள்.