
டிரா ஆன 3வது டெஸ்ட்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான சிட்னியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி டிரா ஆகியுள்ளது. நேற்றைய போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் ரோகித் சர்மா, ரிஷப் பந்த், புஜாரா, அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் இதை சாதித்துள்ளனர்.

மீண்டும் 2வது இடத்தில் இந்தியா
இதையடுத்து போட்டி டிரா ஆனது. இந்த போட்டியில் பெற்றுள்ள புள்ளிகள் அடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தற்போது இந்திய அணி 2வது இடத்திற்கு மீண்டும் முன்னேறியுள்ளது. 2வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி தற்போது 3வது இடத்திற்கு கீழிறங்கியுள்ளது.

ஐசிசி டிவிட்டர் பதிவு
கடந்த மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி இந்தியாவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. இந்நிலையில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு மீண்டும் தாவியுள்ளது. இதுகுறித்து ஐசிசி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

0.2% வித்தியாசம்
ஆயினும் இரு அணிகளுக்கும் இடையில் குறைவான அதாவது 0.2 சதவிகித வித்தியாசமே உள்ளது. இந்நிலையில் பிரிஸ்பேனில் வரும் 15ம் தேதி நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் இந்தியாவின் புள்ளிகள் மேலும் உயரும்.


Click it and Unblock the Notifications











