
கலக்கல்
அதன்பின் முதல் இன்னிங்கில் இந்திய அணியில் ரோஹித் 6, கோலி 11, கில் 29 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளனர். இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடி வந்த பண்ட் 91 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். புஜாரா அதேபோல் 73 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

சுந்தர்
முதல் இன்னிங்சில் வாஷிங்க்டன் சுந்தர் அதிரடியாக ஆடி 85 ரன்களை எடுத்தார். அதன்பின் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் இறங்கிய இங்கிலாந்து அணி வேகமாக ஆடி ரன்களை குவிக்க முயன்றது. விக்கெட் சென்றாலும் 200 ரன்னாவது எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டது.

இரண்டாவது இன்னிங்ஸ்
2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 178 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவிற்கு இங்கிலாந்து 419 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது. இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் 6 விக்கெட் எடுத்து அசத்தி உள்ளார். இதன்பின் பேட்டிங் இறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நேற்றே ரோஹித் 12 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் அவுட்டானார்.

இன்று
இந்த நிலையில் இன்று இந்திய அணியில் அடுத்தடுத்து விக்கெட் விழுந்தது. அதிலும் இந்திய அணி அதிகம் நம்பிய ரஹானே 0, புஜாரா 15, பண்ட் 11 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். டாப் ஆர்டர் வீரர்கள் அவுட்டான காரணத்தால் டவுன் ஆர்டர் வீரர்கள் திணறினார். தனியாளாக கோலி மட்டும் போராடி வந்தார்.

கோலி
தனி நபராக போராடி வந்த கோலி 72 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதையடுத்து டெயில் எண்ட் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆக இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 192 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. 227 ரன்களை வித்தியாசத்தில் இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தியது.

சென்னை
சென்னையில் 22 வருடங்களாக டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது இல்லை. இந்த நிலையில் முதல்முறை இங்கு இந்தியா தோல்வி அடைந்துள்ளது. இந்திய அணிக்கு இந்த தோல்வி பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications