
காரணம் என்ன?
உலக கிரிக்கெட் ரசிகர்களின் ஓட்டுமொத்த கேள்வியே இந்த தலைப்பு தான், சீனியர்களால் முடியாதது எப்படி ஜூனியர்களால் முடிகிறது என்பது தான். இது குறித்து இந்திய ஜூனியர் அணியின் மெண்டராக இருந்த வி.வி.எஸ். லட்சுமணன், இதற்கு காரணம் பி.சி.சி.ஐ.யின் உள் கட்டமைப்பு தான் என்று பதில் அளித்துள்ளார்.

வயதுக்கான போட்டிகள்
மற்ற நாடுகள் எல்லாம் சீனியர் கிரிக்கெட்டில் தான் கவனம் செலுத்தும், அவர்களுக்கு மட்டும் தான் போட்டி நடத்தும். ஆனால் இந்தியாவில் அப்படி அல்ல 12 வயது, 14 வயது, 16 வயது, 22 வயது, 24 வயது என பல்வேறு பிரிவுகளுக்கும் தேசிய அளவில் கிரிக்கெட் தொடர்களை பி.சி.சி.ஐ. நடத்துகிறது.

சிக்கல்
ஜூனியர் அணிகளை தேர்வு செய்வதற்காகவும், அவர்களது ஆட்டங்களை கண்காணிப்பதற்காகவும் தனி தேர்வுக்குழுவினரையும் பி.சி.சி.ஐ. அமைத்துள்ளது. இதனால் தான் அண்டர் 19 இல் திறமையான வீரர்கள் பலர் உள்ளனர் என்று வி.வி.எஸ். லட்சுமணன் கூறினார். ஆனால் இம்முறை கோவிட் பிரச்சினை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எந்த போட்டியும் நடைபெற வில்லை. இதனால் அணியை தேர்வு செய்வதில் மிகவும் சிக்கலாக இருந்தது.
Recommended Video

ஆரம்பம் தான்
தேர்வுக்குழுவினர்களும் புதிய நபர்கள், இதனால் அவர்களுக்கு நேரமே இல்லை. இரப்பினும் வெறும் 3 மாதத்தில் அணியை உருவாக்கி, உலககோப்பைக்கு தயாராகும் விதமாக ஆசிய கோப்பை, முத்தரப்பு தொடர் என பல போட்டிகளை பி.சி.சி.ஐ. நடத்தியது. இதனால் தான் இந்த அணி உருவானது. கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும், நாட்டுக்காக விளையாடுவதை பெரிதாக நினைத்து வீரர்கள் தடையை உடைத்தனர். இது வெறும் ஆரம்பம் தான். இந்திய அணியில் இவர்கள் இடம்பெறுவது தான் அவர்களது இலக்கு என்று லட்சுமணன் கூறினார்.


Click it and Unblock the Notifications











