பிளேயிங் லெவனில் நாளை 2 மாற்றம்.. முக்கிய வீரருக்கு வாய்ப்பு.. காய் நகர்த்தும் ராகுல்- லட்சுமணன்
ஹராரே: இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நாளை சனிக்கிழமை மதியம் 12.45 மணிக்கு தொடங்குகிறது.
Recommended Video
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், 2வது ஒருநாள் போட்டியை வென்றே ஆக வேண்டிய நெருக்கடியில் ஜிம்பாப்வே அணி உள்ளது.
நாளைய போட்டியும் பகல் நேர ஆட்டமாக நடைபெறவதால், அடுகளம், போட்டி தொடங்கியதும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக தான் செயல்படும்.

டாஸ் முக்கியம்
இதனால், டாஸ் ஒரு முக்கிய பங்க வகிக்கும். ஒரு வேலை இந்தியா பேட்டிங் செய்ய நேர்ந்தால், ஷிகர் தவான், சுப்மான் கில் ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்க்க வேண்டிய நிலை அவசியமாகும். இந்த நிலையில், பிளேயி லெவனில் 3 விக்கெட் கீப்பர் தேவையா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

ராகுல் திரிபாதி
முதல் ஒருநாள் போட்டியில் ராகுல், சஞ்ச சாம்சன், இஷான் கிஷன் என மூன்று வீரர்கள் உள்ளனர். இதனால் நாளைய ஆட்டத்தில் இஷான் கிஷனை தூக்கிவிட்டு, ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தள்ளது. லட்சுமணனும், இதே பிளானில் இருப்பதாக தெரிகிறது. இதனால் ராகுல் திரிபாதி இந்தியாவுக்காக தனது முதல் ஆட்டத்தில் விளையாடலாம்.

புரோமோஷனுக்கு வாய்பபு
இதே போன்று அக்சர் பட்டேலுக்கு ஓய்வு வழங்கிவிட்டு, ஷாபாஸ் அகமதை பிளேயிங் லெவனில் களமிறக்கலாம் என்றும் கூறப்படகிறது. எனினும் அதற்கான வாய்ப்பு மிக குறைவே. பந்துவீச்சிலும் அனைவரும் சிறப்பாக செயல்பட்டதால், அதில் எந்த மாற்றமும் நடக்க வாய்ப்பில்லை. ஒரு வேலை நாளைய ஆட்டத்தில் இந்தியா எளிய இலக்கை துரத்த நேரிட்டால் ராகுல், சாம்சன், தீபக் ஹூடா ஆகியோருக்கு பேட்டிங்கில் புரோமோசன் தரப்படலாம்,

பிளேயிங் லெவன்
1, ஷிகர் தவான், 2, சுப்மான் கில், 3, இஷான் கிஷன்/ ராகுல் திரிபாதி, 4, கேஎல் ராகுல், 5, தீபக் ஹூடா, 6, சஞ்சு சாம்சன், 7, அக்சர் பட்டேல், 8, தீபக் சாஹர், 9, குல்தீப் யாதவ், 10, முகமது சிராஜ், 11, பிரசித் கிருஷ்ணா


Click it and Unblock the Notifications