நாக்பூர்: உலக கோப்பை கிரிக்கெட்டின் நாளைய சூப்பர்-10 போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள், நாக்பூர் வி.சி.ஏ ஜம்தா ஸ்டேடியத்தில் பலப் பரிட்சை நடத்த உள்ளன. போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன.
டோணி தலைமையிலான இந்திய அணியும், கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், உலக கோப்பையில், தங்களது முதலாவது சூப்பர் 10 போட்டியில் நாளை மோதுகின்றன.

இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பிக்கிறது. இதையொட்டி இரு அணிவீரர்களும் இன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். 44,900 ரசிகர்கள் கொள்ளளவு கொண்ட ஸ்டேடியத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன.
நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த 8ம் தேதி ஆரம்பித்தாலும், சூப்பர்-10 போட்டிகளில்தான் பெரிய அணிகள் பங்கேற்கின்றன என்பதால் நாளை முதல் நடைபெற உள்ள போட்டிகள் மீதுதான் ரசிகர்கள் கவனம் உள்ளது.