
கேப்டவுன்: முதல் இரண்டு ஒருதினப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, கேப்டவுனில் 7ம் தேதி நடக்கும் மூன்றாவது போட்டியில் விளையாட உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ள கேப்டவுனில் தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய அணி தண்ணி காட்டும் என்று எதிர்பார்க்கலாம்.
தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
