முதல் ஓவரை மெய்டெனாக வீசினார் புவனேஷ்வர் குமார்
லண்டன்: இநதியா, பாகிஸ்தான் இடையேயான இறுதி போட்டியில் ரன் ஏதும் கொடுக்காமல் மெய்டன் ஓவராக வீசினார் இந்தியாவின் புவனேஷ்வர் குமார்.
பிர்மிங்காமில் கெனிங்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. ரசிகர்கள் ஆரவாரத்துடன் இரு அணிகளும் மைதானத்தை 2.30 மணி அளவில் வந்தடைந்தனர்.

அப்போது டாஸ் போடப்பட்டது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. எனினும் முதலில் பாகிஸ்தானை பேட் செய்யுமாறு இந்தியா அழைத்தது. அதன்படி இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக பந்து வீச முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து முதலில் பாகிஸ்தான் அணி பேட் செய்ய தொடங்கியது. இதில் முதல் ஓவரில் பாகிஸ்தான் ரன் எடுக்க விடாமல் மெய்டன் ஓவராகவே போட்டார் புவனேஷ்வர் குமார்.
இரண்டாவது ஓவர் தொடங்கிய நிலையில் பும்ரா பந்துகளை வீசினார். பும்ரா வீசிய பந்துகளில் 3 ரன்களை குவித்தது.
Story first published: Sunday, June 18, 2017, 15:43 [IST]
Other articles published on Jun 18, 2017


Click it and Unblock the Notifications