
பெரிய குறை
மிட்செல் ஸ்டார்க் பந்தை பார்த்தாலே கால் இரண்டம் பரத நாட்டியம் ஆடுகிறது. மேலும் ஸ்டம்பை நோக்கி வரும் இன் ஸ்விங் யாக்கர்களை எதிர்கொள்ள கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களே தடுமாறுகின்றனர். இந்த குறையை இனி அனைத்து அணிகளும் பயன்படுத்தி கொள்ளும். இதனால், இன் ஸ்விங் யாக்கர்களை பயன்படுத்தும் முறையை இந்திய வீரர்கள் எப்படியாவது கையாள வேண்டும்.

கடைசி வாய்ப்பு
இதே போன்று சூர்யகுமார் யாதவ்க்கு நாளைய போட்டி தான் கடைசி வாய்ப்பாக இருக்கும். இதுவரை தொடர்ந்து 2 முறை கோல்டன் டக் என்பது, அவர் சந்தித்த பெரிய அவமானங்கள் ஆகும். நாளையும் சூர்யகுமார் சொத்ப்பினால் இனி, ஒருநாள் கிரிக்கெட் பக்கமே சூர்யகுமாரால் வர முடியாது.

பந்துவீச்சில் மாற்றம்?
விசாகப்பட்டினத்தில் இந்திய பந்துவீச்சாளர்களை ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் அடித்து நொறுக்கி விட்டார்கள். இதனால் , பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடி அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நாளை ஆட்டத்தில் ஷமி அல்லது சிராஜ் எதேனும் ஒருவருக்கு ஓய்வு வழங்கி விட்டு, ஆர்ஸ்தீப் சிங் அல்லது உம்ரான் மாலிக்கை ரோகித் சர்மா சேர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளேயிங் லெவன்
1, ரோகித் சர்மா, 2, சுப்மன் கில், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, கேஎல் ராகுல், 6, ஹர்திக் பாண்டியா, 7, ஜடேஜா, 8, முகமது ஷமி/ உம்ரான் மாலிக், 9, முகமது சிராஜ்/ ஆர்ஸ்தீப், 10, அக்சர் பட்டேல் 11, குல்தீப் யாதவ்


Click it and Unblock the Notifications











