
பந்துவீசவே இல்லை
இதனால் இந்திய அணி தங்களுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்த பல நடவடிக்கை எடுக்க உள்ளது. பந்துவீச்சில் இந்திய அணி அக்சர் பட்டேலையும், 2 வேகப்பந்துவீச்சாளர்களையும் மிகவும் குறைவாகவே பயன்படுத்துகிறது. இதில் முகமது சிராஜ் இந்தூர் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 6 ஓவர் தான் வீசினார். இரண்டாவது இன்னிங்சில் பந்துவீசவே இல்லை.

சூர்யகுமார் யாதவ்
இதனால், முகமது சிராஜை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்க இந்தியா முடிவு எடுத்துள்ளது. அது சூர்யகுமாரா இல்லை கேஎல் ராகுலா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இதே போன்று கேஎஸ் பரத் விக்கெட் கீப்பிங்கில் பட்டையை கிளப்பினாலும் பேட்டிங்கில் சொதப்புகிறார்.

இஷான் கிஷன்
இதனால் கேஎஸ் பரத்தை நீக்கிவிட்டு, இஷான் கிஷனை அணியில் சேர்க்க ரோகித் சர்மா முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. ரிஷப் பண்ட் இல்லாத நிலையில் இஷான் கிஷன், அவருக்கு மாற்று வீரராக நல்ல தேர்வாக இருப்பார் என்று கிரிக்கெட் விமர்சகர்களும் கருதுகின்றனர்.

ஜடேஜா
இதே போன்று ஜடேஜாவை நடுவரிசையில் களமிறக்கும் முடிவும் இந்திய அணிக்கு கை கொடுக்கவில்லை. இடது, வலது பேட்ஸ்மேன் களத்தில் நிற்க இந்த முடிவு எடுக்கப்பட்டாலும், ஜடேஜா கீழ்வரிசையில் தான் சிறப்பாக விளையாடுவதால், அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications











