For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாளை யார் ஜெயிப்பாங்க கண்டுபிடிங்க.. நீங்க வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்

By Staff

குவஹாத்தி: குவஹாத்தியில் நாளை மழை வருமா என்று கேட்டால், வரலாம், அதற்கான வாய்ப்பு உள்ளது என்று வானிலை அறிக்கை கூறலாம். சரி யார் ஜெயிப்பார்கள் என்று கேட்டால், வில்லேஜ் விஞ்ஞானிகள் கூட சரியாக பதிலளித்து விடுவார்கள்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி-20 போட்டி குவஹாத்தியில் நாளை நடக்க உள்ளது. ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் இந்தியா ஏற்கனவே முன்னிலையில் உள்ளது.

 India ready to seize series


17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகள் குவஹாத்தியிலும் நடந்து வருகின்றது. அங்கு 2011ல் டி-20 உலகக் கோப்பையை வென்ற இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன.

இதுவரை இரு அணிகளும் டி-20 போட்டிகளில் மோதியதில், இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது. மேலும் தற்போதுள்ள பார்மில், இந்தியா இந்தத் தொடரை 3-0 என்று வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரோல் கிடைத்தாலும் ஒன்னும் செய்ய முடியாது என்ற நிலையிலேயே, ஆஸ்திரேலிய அணி உள்ளது. தொடர்ந்து விக்கெட்களை பறி கொடுப்பது, எங்க போட்டாலும் அடிக்கிறாங்களே என்று ஆஸ்திரேலியா புலம்புகிறது.

13ம் தேதி ஐதராபாத்தில் கடைசி டி-20 போட்டி இருந்தாலும், குவஹாத்தியிலேயே தொடரை வென்று விட வேண்டும் என்ற நினைப்பில் கோஹ்லி அணி தயாராக உள்ளது.

Story first published: Monday, October 9, 2017, 19:18 [IST]
Other articles published on Oct 9, 2017
English summary
India – Australia second T-20 tomorrow in Guwahati
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X