டர்பன்: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
இந்தியா தென்னாப்பிரிக்காவிற்கு கிரிக்கெட் விளையாட சென்று இருக்கிறது. 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட நீண்ட தொடர் ஆகும் இது.
இதில் டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என இழந்து இருக்கிறது. இந்த நிலையில் தற்போது ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.
தற்போது முதல் ஒருநாள் போட்டி டர்பனில் நடக்கிறது. காயம் காரணமாக தென்னாபிரிக்க அணியில் இருந்து ஏபி டி வில்லியர்ஸ் விலகி இருக்கிறார்.
ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கோஹ்லி, ரஹானே, டோணி, கேதார் ஜாதவ், பாண்டியா, புவனேஷ்வர்குமார் , குல்தீப் யாதவ், பும்ரா, சாஹல் ஆகியோர் இந்திய அணியில்
டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்ரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் எடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்க அணியின் சார்பிர் டூ பிளெஸ்ஸிஸ் 120 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணியில் சார்பில் குல்தீப் யாதவ் 3, சஹால் 2, ஜாஸ்ரிட் பும்ரா 1 புவனேஷ்வர் குமார் 1 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.