
ரோகித் சர்மா- ரஹானே
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும் ரஹானேவும் களமிறங்கினர். ஆனால் இருவரும் நிலைக்கவில்லை. அடுத்தடுத்து அவுட் ஆகிவிட்டனர்.

கோஹ்லி- மணீஷ் பாண்டே
பின்னர் இணைந்த கோஹ்லி- மணீஷ் பாண்டே ஜோடி நிதானமாக விளையாடியது. மணீஷ் பாண்டே 36 ரன்களில் அவுட் ஆகினார்.

அசத்திய கோஹ்லி- ஜாதவ்
இதையடுத்து கோஹ்லியுடன் கை கோர்த்தார் ஜாதவ். இந்த ஜோடி ரன்குவிப்பில் விறுவிறுப்பை காட்டியது. இந்த ஜோடியை இலங்கை வீரர்களால் பிரிக்க முடியவில்லை.

கோஹ்லி சதம்
ஒருநாள் போட்டிகளில் கோஹ்லி 30-வது சதத்தையும் எட்டினார். 63 ரன்கள் எடுத்த நிலையில் ஜாதவ் அவுட் ஆனார். பின்னர் கோஹ்லியுடன் டோணி இணைந்தார். கோஹ்லி 110 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி வென்றது.

தொடரை கைப்பற்றியது
இந்த வெற்றி மூலம் 5 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியே வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளிடையே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் கொழும்பில் நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications











