இலங்கையை புரட்டி எடுத்த இந்தியா
இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் இலங்கை உள்ளது. அந்த நாடு இதுவரை ஐந்து முறை ஆசிய கோப்பை வென்றுள்ளது. அந்த இலங்கையை 80 மற்றும் 90களில் மூன்று முறை இறுதிப் போட்டிகளில் இந்தியா புரட்டி எடுத்து, ஆசிய கோப்பையை தட்டிச் சென்றது.
1988 வில்ஸ் ஆசிய கோப்பை இறுதி
1988இல் நடந்த ஆசிய கோப்பை இறுதியில் இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை. 176 ரன்களுக்கு சுருண்டது அந்த அணி. அதில் நான்கு பேர் ரன் அவுட் ஆனார்கள். அதை தவிர்த்து அன்று பகுதி நேர பந்துவீச்சாளராக வந்த ஸ்ரீகாந்த் அசத்தலாக 3 விக்கெட்கள் எடுத்தார். அடுத்து ஆடிய இந்திய அணியில் நவ்ஜோத்சிங் சித்து 76 ரன்கள் எடுத்தார். வெங்க்சர்க்கார் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுக்க இந்தியா எளிதாக வென்றது.
1990-91 ஆசிய கோப்பை இறுதி
1991ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதியில் இந்தியா, இலங்கை மோதின. இந்த போட்டியிலும் முதலில் இலங்கை ஆடியது. நிர்ணயிக்கப்பட்ட 45 ஓவர்களில் இலங்கை அணி 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. அன்றைக்கு இளம் வீரரான ஜெயசூர்யா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆடிய இந்தியாவில், மஞ்ச்ரேக்கர் 75, இளம் சச்சின் 53, அசாருதீன் 54 ரன்கள் குவிக்க இந்தியா 17 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது.
1995 பெப்சி ஆசிய கோப்பை இறுதி
இந்த இறுதியிலும், இலங்கை அணி தான் முதலில் பேட் செய்தது. அந்த அணியின் குருசின்ஹா 85 ரன்கள் அடித்தார். மற்றவர்கள், சொற்ப ரன்கள் மட்டுமே அடித்தனர். அந்த 231 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இந்திய அணியில் சச்சின் துவக்க ஆட்டக்காரராக ஆடி, 41 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். சித்து 84, அசாருதீன் 90 ரன்கள் குவிக்க இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.