காயம்-தெ. ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஷேவாக்குக்கு ஓய்வு

சில மாதங்களுக்கு முன்பு ஷேவாக்குக்கு்க காயம் ஏற்பட்டது. அதிலிருந்து குணமான நிலையில் அவர் தற்போது தென் ஆப்பிரிக்க தொடரில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு ஒரு நாள் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 12ம் தேதி ஒரு நாள் போட்டித் தொடர் தொடங்குகிறது. தற்போது ஷேவாக்குக்குப் பதில் ரோஹித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தோளில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஷேவாக் ஒரு நாள் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்குப் பதில் ரோஹித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் ஒரு நாள் தொடரில் அணியின் 17வது வீரராக முரளி விஜய் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:43 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications