கோலி மாற்றினார்
அதில் தோனி ஓய்வளிக்கப்பட்டு அவருக்கு பதில் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். அம்பதி ராயுடு அமர்த்தப்பட்டு அவருக்கு பதிலாக ராகுல் ஆட வைக்கப்பட்டார். அந்த ஆட்டத்தில் வழக்கமாக 3வதாக களமிறங்கும் கோலி ராகுலை இறங்க பணித்தார். ஆனால் ராகுலும் பெரிதாக சாதிக்கவில்லை.
இந்தியா தோல்வி
தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சதமடித்த கோலி மொகாலி போட்டியில் சொற்ப ரன்களுக்கு வெளியேறினார். இறுதி 10 ஓவர்களில் இந்திய அணி குறைவான ரன்களே அடித்ததால் 4வது போட்டியில் தோல்வியை தழுவியது.
ஜாகீர் கருத்து
இதற்காக பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
பேட்ஸ்மென்கள் வேண்டும்
வழக்கமாக 3வது இடத்தில் இறங்கும் கோலி 4வது இடத்தில் இறங்கியது மிகவும் தவறான ஒன்று. துவக்க வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதை தொடர்ந்து எடுத்து செல்ல நல்ல பேட்ஸ்மென்கள் வேண்டும்.
சரியானது அல்ல
ராகுல் நீண்ட இடைவேளைக்கு பின் தற்போது இறங்கியுள்ளார். அவரிடம் எதிர்பார்ப்பது சரியானது அல்ல என்று ஜாகீர் கான் கூறினார்.