
மகளிர் அணியின் அசத்தல்
மறுபக்கம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என்று வென்றுள்ளது. அதற்கடுத்து 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் முதல் ஆட்டத்தில் வென்று 1-0 என முன்னிலையில் உள்ளது.

ஆண்கள், பெண்கள் அணி மோதுகின்றன
ஆடவர் அணி நாளை தனது 6வது ஒருதினப் போட்டியை விளையாட உள்ளது. அதே நேரத்தில் மகளிர் அணி 2-வது டி-20 போட்டியை விளையாட உள்ளது.

முழிபிதுங்க வைத்த அணிகள்
புருவப் போட்டியில் ஜெயிச்சது பிரியா வாரியரா, ரோஷன் அப்துல் ரஹூப்பா என பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கையில், இரண்டு இந்திய அணிகளுமே, தென்னாப்பிரிக்க அணிகளை முழிப்பிதுங்க வைத்துள்ளன. அது நாளையும் தொடரும்.

மத்தளமான தென்னாப்பிரிக்கா
ஆண்கள் அணியைப் பொருத்தவரை, மிகப் பெரிய தொடர் வெற்றி என்ற இலக்குடன் உள்ளது. மகளிர் அணி டி-20 தொடரையும் வெல்ல வேண்டும் என்ற துடிப்புடன் உள்ளது. அதனால், நாளை நடக்கும் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு இரண்டு பக்கமும் செம இடி காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
