
போராட்டம்
இந்த போட்டியே இன்று காலைதான் மொத்தமாக மாறியது. இன்று காலை முதல் 10 ஓவர்கள் இந்திய அணிக்கு சாதகமாகவே இருந்தது. பிட்ச் இந்திய அணிக்கு சாதகமாகவே இருந்தது. ஆனால் போக போக பிட்ச் மாறியது.

இன்று எப்படி
இன்று காலை 10 ஓவர்கள் வீசப்பட்ட பின் பிட்ச் அப்படியே பவுலிங் செய்ய சாதகமாக மாறியது. பந்தும் பழைய பந்தானது. இதனால் பிட்ச் அப்படியே ரிவர்ஸ் ஸ்விங் ஆக தொடங்கியது. இந்திய அணி இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை .

பந்து ஸ்விங்
பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆக தொடங்கியதில் இருந்தே பிட்ச் மோசமான இந்திய அணியை அச்சுறுத்த தொடங்கியது. புஜாரா இப்படிப்பட்ட பந்தில் திணறிய பின்தான் அவுட் ஆனார். இந்திய அணியில் புஜாரா, கோலி இரண்டு பேர் மட்டுமே ரிவர்ஸ் ஸ்விங்கில் எளிதாக ஆடுவார்கள். ஆனால் இன்று புஜாராவே அவுட்டாகிவிட்டார்.

ஷாக்
இதன் பின் கோலி கடுமையாக ஷாக் ஆனார். பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆவதை பார்த்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் நிலைகுலைந்து போனார். இதில் இருந்துதான் ஆட்டம் மொத்தமாக இந்திய அணிக்கு எதிராக திரும்பியது.

கோலி கண் முன்னே
கோலியின் கண் முன்னே வரிசையாக விக்கெட்டுகள் சரிய தொடங்கியது. கோலி மட்டுமே நிதானமாக ஆடி வந்தார். அதன்பின்பும் பிட்ச் இதேபோல் செயல்பட்டதால் இந்திய அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது.


Click it and Unblock the Notifications