
வெற்றி
அதிலும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆன தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். மொத்தமாக நான்கு விக்கெட், இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 80+ ரன்கள் என்று வாஷிங்க்டன் சுந்தர் புதிய சாதனை படைத்தார்.

சிக்கல்
இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியின் போது தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் எதிர்கொண்ட வித்தியாசமான பிரச்சனை ஒன்றை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இவர் முதலில் டெஸ்ட் அணியில் ஆடுவதாக இல்லை. ஜடேஜா இல்லை என்பதால் ஆல் ரவுண்டனர் வேண்டும் என்று இவர் களமிறக்கப்பட்டார். இவர் மிகவும் உயரமான வீரர்.

உயரம்
இதனால் இவரின் காலில் மொத்தமாக பொருந்துவது போன்ற பேட் கிடைக்கவில்லை. இவரிடம் ஒருநாள் அணிக்கான பேட் மட்டுமே இருந்துள்ளது. டெஸ்ட் அணிக்கான பேட் இல்லை. இதனால் போட்டிக்கு முன்பாக பேட் இல்லாமல் சிரமப்பட்டுள்ளார். இவரின் உயரத்திற்கு இந்திய அணியில் யாரிடமும் பேட் இல்லை என்று கூறப்படுகிறது.

அலைச்சல்
இதனால் ஆஸ்திரேலிய அணியிடம் இவருக்காக பேட் கடன் வாங்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். ஆனால் கொரோனா விதிகள் காரணமாக ஆஸ்திரேலிய அணியிடமும் சுந்தருக்காக பேட் வாங்க முடியவில்லை. இந்திய அணியிடம் இவரின் உயரத்திற்கு டெஸ்ட் பேட் இல்லை என்றதும் போட்டி நடக்கும் அதே நாளில் புதிய பேட் வாங்கப்பட்டது.

புதிய பேட்
இதற்காக பயிற்சி குழுவை சேர்ந்த சில போட்டி நடக்கும் அதே நாளில் வெளியே கடைக்கு சென்று புதிய பேட் வாங்கி உள்ளனர். அதுவரை மொத்த டீமும் பதற்றத்திலேயே இருந்துள்ளது. ஆனால் அப்போதும் இவரின் உயரத்திற்கு பேட் கிடைக்கவில்லை என்பதால் பல கடைகளுக்கு சென்று, கடைசியாகவே சுந்தரின் உயரத்திற்கு ஏற்ற பேட் கிடைத்துள்ளது .


Click it and Unblock the Notifications











