Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய டி20 அணி கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் நீக்கப்பட வாய்ப்பு.. வைபவ் சூர்யவன்ஷிக்கு இடம்?

மும்பை: 2026 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக் கோப்பையை இந்திய அணிக்குத் தலைமை தாங்கி வென்றிருந்தாலும், சூர்யகுமாரின் தற்போதைய மந்தமான பேட்டிங் ஃபார்ம் கவலை அளிக்கிறது. 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்கான இந்திய அணியில் அவர் இடம்பெறுவாரா என்ற கேள்விகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஜூன் மாதம் அயர்லாந்துடன் 2 இருபது20, ஜூலை மாதம் இங்கிலாந்துடன் 5 இருபது20 போட்டிகள் கொண்ட இந்தியாவின் வரவிருக்கும் ய சுற்றுப்பயணம் சூர்யகுமாருக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இத்தொடரில் அவரது தலைமைத்துவத்தை விட பேட்டிங் திறன் தான் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். இந்தத் தொடரில் அவரது செயல்திறன், 2028 ஒலிம்பிக் மற்றும் ஆஸ்திரேலியா உலகக் கோப்பை வரையிலான அவரது இடத்தைத் தீர்மானிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக வெளியான பிசிசிஐ வட்டார தகவலின் படி, “சூர்யா தற்போது அணிக்குத் தலைமை தாங்குகிறார். ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக அவர் தனது ஆட்டத்திறனில் சீரான தன்மையை பராமரிக்க வேண்டும். இங்கிலாந்தில் அவர் தலைமை தாங்குவார், ஆனால் 2028 வரை, அவரது தேர்வு முற்றிலும் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும்,” என்று கூறியது.

இந்தியாவின் மூன்றாவது அதிக இருபது20 சர்வதேச ரன் குவித்த வீரரான சூர்யகுமார், 2025ல் 21 போட்டிகளில் அரை சதம் அற்றிருக்கிறார். 2026 ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகளில் மூன்று அரை சதங்களை அடித்த அவர், உலகக் கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிராக 84* ரன்கள் எடுத்தார். எனினும், மீண்டும் அவரது ஃபார்ம் சரிந்து, ரன்கள் குவிக்கத் தடுமாறி வருகிறார்.

15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 2025ல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிராக ஐபிஎல் அறிமுகமானதிலிருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 2026 ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு எதிராக பேட்டிங்கில் காட்டிய திறமை பெரிதும் பாராட்டப்பட்டது. இதன்மூலம் இந்திய இருபது20 அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

ஜூன்-ஜூலை அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கான தேசியத் தேர்வாளர்கள் தேர்ந்தெடுத்த 35 இருபது20 சிறப்பு வீரர்களில் வைபவ் சூர்யவன்ஷியும் ஒருவர். இந்திய அணி அயர்லாந்தில் முதலில் தரையிறங்குவதால், இங்கிலாந்து விசா பொருந்தாது. எனவே, ஒவ்வொரு வீரருக்கும் தனி அயர்லாந்து விசா அவசியம். “குறைந்தது 35 வீரர்களின் பெயர்களைக் கொடுக்க லாஜிஸ்டிக்ஸ் துறை தேர்வாளர்களைக் கேட்டது,” என பிசிசிஐ வட்டாரம் குறிப்பிட்டது.

வைபவ் தயாராக இருப்பதாக தேர்வாளர்கள் நம்பினாலும், அவருக்குக் கடும் போட்டி உள்ளது. சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன் மூவரும் இருபது20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அரை சதம் அடித்தவர்கள். யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற திறமையான தொடக்க வீரர்களும் வரிசையில் உள்ளனர்.

“வைபவ் தயாராக இருக்கிறார். ஆனால் அபிஷேக் அல்லது சஞ்சுவை நீக்குவதற்கு தேர்வாளர்கள் வலுவான காரணங்களைக் கொடுக்க வேண்டும். ஏனெனில், ஒருவரை நீக்கினால், 'சூர்யா எப்படி தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்கிறார்?' என்ற கேள்வி எழும்,” என்று கூறியது.

வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகம் அயர்லாந்து அல்லது ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் நேரலாம். எனினும், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான உள்ளூர் தொடர் சிறந்த வாய்ப்பாக அமையலாம். இவ்விரு தொடர்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், இரண்டு இருபது20 அணிகள் அமைக்கப்படும். “முன்னதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், இந்த இரண்டில் ஒன்றில் வைபவ் விளையாடுவார்,” என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, April 14, 2026, 17:42 [IST]
Other articles published on Apr 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+