மும்பை: இந்தியாவின் டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தற்போது லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள சென்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியினர் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தயாராகி வரும் நிலையில், சூர்யகுமார் மருத்துவ சிகிச்சை ஒன்றுடககாக இங்கிலாந்தில் உள்ளார்.
இது அடுத்த சில நாட்களில் நடைபெற வாய்ப்புள்ளது. இதுகுறித்து பிசிசிஐ, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், அறிக்கைகளின்படி, இந்த மருத்துவ நடைமுறைக்கு முழுமையாக குணமடைய ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் வெள்ளைப் பந்து கிரிக்கெட் அட்டவணையில் தற்போது இடைவெளி இருப்பதாலும், குறிப்பாக டி20 போட்டிகளில் உடனடி சர்வதேச அணிகள் இல்லாததாலும், 34 வயதான இந்த பேட்ஸ்மேனுக்கு தனது உடற்தகுதி மற்றும் மீட்பு மீது கவனம் செலுத்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்திய அணியின் அடுத்த டி20 தொடர் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குகிறது, அப்போது அவர்கள் வெள்ளைப் பந்து தொடருக்காக வங்கதேசம் செல்கின்றனர். அதன்பின், தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சொந்த மண்ணில் போட்டிகள் நடைபெறும்.
பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெளிநாட்டு தொடர் நடைபெறும். சூர்யகுமார் தனது முழு உடற்தகுதியை மீட்டெடுத்து, 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயராகி வருகிறார். சமீபத்திய ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சிறப்பான பார்மில் இருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 16 இன்னிங்ஸ்களில் 717 ரன்கள் குவித்து, 65.18 சராசரி மற்றும் 167.9 ஸ்ட்ரைக் ரேட் உடன் MI அணியின் ரன் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அவர் விளையாடிய 16 போட்டிகளிலும் 25 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை அடித்து, டி20 களில் தொடர்ச்சியாக 25 ரன்கள் மேல் எடுத்த புதிய சாதனையை படைத்தார்.
அவரது ஆட்டங்கள் மும்பை இந்தியன்ஸை பிளேஆஃப்க்கு தகுதி பெற முக்கிய காரணமாக அமைந்தன.
இருப்பினும், குவாலிபயர் 2 இல் பஞ்சாப் கிங்ஸிடம் தோல்வியடைந்ததால் மும்பை இந்தியன்ஸின் 6வது கோப்பை கனவு முடிவுக்கு வந்தது. ஐபிஎல் தொடருக்கு பிறகு, அவர் மும்பை டி20 லீக்கில் ட்ரையம்ஃப் நைட்ஸ் MNE அணிக்காக விளையாடினார். இருப்பினும், அவரது அணி ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று பிளேஆஃப் வாய்ப்பை தவறவிட்டது. அவர் லீக்கில் ஐந்து இன்னிங்ஸ்களில் 122 ரன்கள் எடுத்தார்.