Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த 7 பேர்தான் கேம் சேஞ்சர்ஸ்.. கோலி எடுத்த முடிவால் அதிர்ந்து போன பிசிசிஐ.. இப்படி பார்த்ததே இல்லை

சென்னை: இங்கிலாந்துக்கு எதிராக டி 20 தொடரில் ஆட இருக்கும் இந்திய அணிதான் இதுவரை இந்தியாவிற்காக விளையாடியதிலேயே மிகவும் வலுவான டி 20 அணி என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி 20 தொடருக்கான இந்திய அணி நேற்று முதல் நாள் இரவு அறிவிக்கப்பட்டது. நீண்ட நேரம் நடந்த மீட்டிங்கிற்கு பின் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

இந்த டி 20 தொடர் அஹமதாபாத் மைதானத்தில் நடக்க உள்ளது. மீதம் உள்ள 2 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு டி 20 போட்டிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீரர்கள்

வீரர்கள்

இங்கிலாந்துக்கு எதிராக அறிவிக்கப்பட்ட டி 20 இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ராகுல், ஷிகர் தவான், சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, பண்ட் , இஷான் கிஷான், சாகல், வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல், வாஷிங்க்டன் சுந்தர், ராகுல் திவாதியா, நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாகர், சைனி , ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணியில் தற்போது மொத்தம் 7 ஸ்பின் பவுலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார். வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல், வாஷிங்க்டன் சுந்தர், ராகுல் திவாதியா, ரோஹித் சர்மா ஆகிய 5 ஸ்பின் பவுலர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். கூடுதலாக 2 ஸ்டான்ட் பை ஸ்பின் பவுலர்களும் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

எப்படி

எப்படி

அஹமதாபாத் பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி மாற்றப்பட்டு இருப்பதால் இப்படி இந்திய அணியில் ஸ்பின் பவுலர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிராக டி 20 தொடரில் ஆட இருக்கும் இந்திய அணிதான் இதுவரை இந்தியாவிற்காக விளையாடியதிலேயே மிகவும் வலுவான டி 20 அணி என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். இந்திய அணி மிகவும் முழுமையாக இருக்கிறது.

டாப் ஆர்டர்

டாப் ஆர்டர்

டாப் ஆர்டரில் இருக்கும் கோலி, ரோஹித், தவான், ராகுல், பண்ட், சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷான், பாண்டியா என்று அனைத்து வீரர்களும் அதிரடியான டி 20 பார்மெட் வீரர்கள். அதிலும் இஷான் கிஷான் , சூர்யகுமார் வருகையால் இந்திய அணி மொத்தமாக புதிய பலம் அடைந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் கோலி கொடுத்த கிரீன் சிக்னல் மொத்தமாக அணியை மாற்றி உள்ளது.

மாற்றம்

மாற்றம்

அதிலும் டாப் ஆர்டரில் இருக்கும் கோலி, ரோஹித், தவான், பண்ட், சூர்ய குமார் யாதவ், பாண்டியா, வாஷிங்க்டன் சுந்தர் ஆகிய 7 பேருமே இந்திய அணியில் கேம் சேஞ்சர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Monday, February 22, 2021, 12:40 [IST]
Other articles published on Feb 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+