டிசம்பர் 19ம் தேதி
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், அகில இந்திய தேர்வுக் குழு டிசம்பர் 19ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணியளவில் டெல்லி ஹோட்டல் ஐடிசி மெளர்யாவில் கூடி அணித் தேர்வில் ஈடுபடும்.
வீரர்கள் தேர்வு
இந்தக் கூட்டத்தின்போது ஆஸ்திரேலியா செல்லும் இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 வார டூர்
இது இந்தியாவின் குறுகிய கால தொடராக இருக்கும். 3 வாரமே இது நீடிக்கும். இதில் 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டுவென்டி 20 போட்டிகளில் இரு அணிகளும் மோதும்.
ஜனவரி 12 முதல்
ஜனவரி 12ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை இந்த தொடர் நீடிக்கும். இந்தத் தொடரின்போது ஆஸ்திரேலியாவின் முக்கியமான மெல்போர்ன், சிட்னி, வாகா, அடிலைட் ஓவல் மற்றும் பிரிஸ்பேன் மைதானங்களில் போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாள் போட்டிகள்
முதல் ஒரு நாள் போட்டி ஜனவரி 12ம் தேதி பெர்த்தில் நடைபெறும். 15ம் தேதி 2வது போட்டி பிரிஸ்பேனிலும், 3வது போட்டி ஜனவரி 17ம் தேதி மெல்போர்ன் நகரிலும், ஜனவரி 20ம் தேதி நான்காவது போட்டி கான்பெராவிலும், 23ம் தேதி கடைசிப் போட்டி சிட்னியிலும் நடைபெறும்.
டுவென்டி 20 போட்டிகள்
ஜனவரி 26ம் தேதி முதல் டுவென்டி 20 போட்டி அடிலைடிலும், 29ம் தேதி 2வது போட்டி மெல்போர்ன் நகரிலும், 31ம் தேதி 3வது போட்டி சிட்னியிலும் நடைபெறும்.