
சிக்சர் மழை
எனினும் தொடக்க வீரராக ரிஷப் பண்ட் களமிறங்கினார். 13 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார். மழை நின்றாலும், சூர்யகுமார் யாதவின் சிக்சர் மழை பொழிய தொடங்கியது. மறுமுனையில், டி20 உலககோப்பையில் வாய்ப்பு கிடைக்காத ஸ்ரேயாஸ், இன்றைய ஆட்டத்தில் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். 9 பந்துகளை எதிர் கொண்டு 13 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்ரேயாஸ் ஒரு தவறை செய்தார்.

சூர்யகுமார் சதம்
ஒரு பவுண்டரையும் ,ஒரு சிக்சரும் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர் பேக் ஃபுட்டில் நின்று ஷாட் அடிக்க முயன்ற போது ஹிட் விக்கெட் ஆனார். எனினும் மறுமுனையில் வாண வேடிக்கை காட்டிய சூரியக்குமார் யாதவ் 49 பந்துகளில் சதம் விளாசினார். இதில் ஏழு இமாலய சிக்சர்களும் 11 பவுண்டரிகளும் அடங்கும் . நடப்பாண்டில் சூரியகுமார் யாதவ் விளாசிய இரண்டாவது சதம் இதுவாகும். கடைசி ஓவரில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, வாசிங்டன் சுந்தர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, டிம் சௌதி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி 191 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது.

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு
192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. எனினும் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தொடக்கம் முதலேயே கட்டுக்கோப்பாக பந்துவீசி நெருக்கடி அளித்தனர். இதில் பெபியன் ஆலன் டக் அவுட்டாகி வெளியேற, கான்வே 25 ரன்களும், பிலிப்ஸ் 12 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

இந்தியா அபாரம்
நியூசிலாந்து அணி வீரர்களுக்கு சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து ஹர்திக் பாண்டியா நெருக்கடி அளித்தார். வில்லியம்சன் மட்டும் பொறுமையாக விளையாடி 52 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால், நியூசிலாந்து அணி 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளையும், சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.


Click it and Unblock the Notifications











