
அருமையான பவுலிங்
உண்மையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி நேற்று தனது ஆல் ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணி நிச்சயம் நேற்று 220 ரன்கள் வரை எடுத்திருக்க முடியும். ஆனால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு ரன் வேகத்தை சற்று மட்டுப்படுத்தி 200 ரன்களுக்குள் நம்மை நிறுத்தி விட்டனர்.

சிறப்பான சேஸிங்
அதன் பின்னர் 193 ரன்கள் என்ற கடினமான இலக்கை மிக அழகாக சேஸ் செய்ய ஆரம்பித்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. கெய்ல், துரிதமாக அவுட்டாகிச் சென்றாலும் கூட லென்டில் சிம்மன்ஸ், சார்லஸ், ரஸ்ஸல் ஆகியோர் அபாரமாக நிலைத்து நின்று ஆடினர்.

சிலிர்க்க வைத்த சிம்மன்ஸ்
குறிப்பாக சிம்மன்ஸ் மிகச் சிறப்பாக ஆடினார். இந்தியப் பந்து வீச்சு அவரை எந்த வகையிலும் பயமுறுத்தவில்லை. மிக மிக அனாயசமாக ஆடினார். அட்டகாசமாக ஆடினார். கோஹ்லியை மிஞ்சி விட்டார் என்று கூடச் சொல்லலாம்.

அன்றே எச்சரித்தார் சாஸ்திரி
மேற்கு இந்தியத் தீவுகள் அணி குறித்து அன்றே எச்சரித்திருந்தார் ரவி சாஸ்திரி. அவர் கூறுகையில் கெய்ல் மட்டுமல்ல, அவர்களிடம் நிறைய அதிரடி வீரர்கள் உள்ளனர். நிறைய போட்டியை வென்று கொடுக்கக் கூடிய வீரர்கள் உள்ளனர். நாம் உஷாரமாக இருக்க வேண்டும். அவர்கள் அபாயகரமானவர்கள் என்று சாஸ்திரி கூறியிருந்தார்.
நாம்தான் சுதாரிக்கத் தவறி விட்டோம்.


Click it and Unblock the Notifications











