
தீவிர விதிகள்
ஓமைக்கரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால், இந்த தொடருக்கு பல முன்எச்சரிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியை நேரில் காண பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களின் பாதுகாப்புக்காக தீவிர பயோ பபுள் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மூன்றாவது அலை
விமான நிலையங்களுக்கு செல்வதை தடுக்கும் வகையில் வீரர்களை சாலை மார்க்கமாக அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு என்று பிரத்யேக ஹோட்டல்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், உலகம் முழுவதும் ஒமைக்கரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் அதன் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இது மூன்றாவது அலை ஏற்பட காரணமாக இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது

பி.சி.சி.ஐ. அறிவிப்பு
எனினும் நிலைமை கையை மீறி செல்லவில்லை. இந்த நிலையில், பி.சி.சி.ஐ. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் அதிகமாக இருந்தாலோ, வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டாலோ தொடரை உடனடியாக நிறுத்திவிட்டு இந்திய அணி நாடு திரும்பிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைக்க வாய்ப்பு
இந்தியாவின் இந்த முடிவிற்கு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஒப்புகொண்டுள்ளது. இதனால் தொடர் நடைபெறும் போது, கொரோனா வைரஸ் பரவல் கையை மீறவே வாய்ப்புள்ளதால், தொடர் பாதியில் நிறுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அப்படி நிறுத்தப்பட்டால் , எஞ்சிய போட்டிகள் இங்கிலாந்த தொடர் போல் அடுத்த ஆண்டுக்கு நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











