டெல்லி: டெல்லியை சேர்ந்த அனுஜ் ராவத், சமீபத்தில் இலங்கையில் நான்கு நாள் போட்டிகளில் ஆடிய இந்திய பத்தொன்பது வயதுக்கு உட்பட்டவர்கள் அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். மொரிஷியஸ் நாட்டில் கடந்த ஆண்டு நடந்த ஒரு டி20 லீக் தொடரில் இவர் விளையாடி உள்ளார்.
ஆனால், அப்போது பிசிசிஐ-யிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என கூறப்படுகிறது. இந்த விஷயம் ஒரு யூட்யூப் கிரிக்கெட் வீடியோவால் தற்போது அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.