
திடீர் குழப்பம்
இந்நிலையில் இந்த ஜோடியை பிரிப்பதற்காக நடந்த ஒரு எல்.பி.டபள்யூ குழப்பம் பேசுப்பொருளாகியுள்ளது. நாதன் லியோன் வீசிய பந்தை சுப்மன் கில் லெக் சைடில் அடிக்க நினைத்தார். அப்போது பந்து மிஸ்ஸாகி எல்.பி.டபள்யூ ஆனார். இதற்கு அம்பயர் நாட் அவுட் கொடுத்தார். எனினும் ஆஸ்திரேலிய அணி டி.ஆர்.எஸ் எடுத்தது. ரிவ்யூவில் பார்த்த போது பந்து நோ பாலாக இல்லை. நேராக பேடில் பட்டு, ஸ்டம்புகளிலும் முழுமையாக படும்படி தான் அமைந்தது. எனினும் அதற்கு நாட் அவுட் கொடுக்கப்பட்டது.

டி.ஆர்.எஸ் முடிவு
நாதன் லியோன் அனைத்து விஷயங்களையும் சரியாக உணர்ந்து டிஆர்எஸ் கேட்க சொன்னார். ஆனால் மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறந்ததை போல, பந்து பேடில் பட்ட இடம் ஆஃப் சைட் ஸ்டம்பிற்கும் வெளியே ஆகும். அதாவது பேடில் பந்து படும் இடம் 3 ஸ்டம்ப் லைன்களில் ஏதாவது ஒன்றிலாக இருக்க வேண்டும். பிட்ச் ஆகும் இடம் ஆஃப் சைடில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பேட்ஸ்மேனை மோதும் இடம் ஸ்டம்ப் லைன்களில் இருக்க வேண்டும். இதனால் நாட் அவுட் கொடுக்கப்பட்டது.

மிஸ்ஸான வாய்ப்பு
நீண்ட நேரமாக அவுட் தான் என நினைத்து குழப்பத்திலேயே நின்றுக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அம்பயர்கள் விளக்கிய பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவம் நடக்கும் நேரத்தில் சுப்மன் கில் 35 ரன்களை அடித்திருந்தார். ஆனால் அந்த ஒரு தவறினால் 70 ரன்களையும் கடந்த சதத்தை நோக்கி நகர்ந்து வருகிறார். பேட்டிங்கிற்கு சாதகமான களமாக இருப்பதால் நிச்சயம் சதம் அடிக்க வாய்ப்புள்ளது.

இக்கட்டான நிலை
இந்த போட்டியின் 3வது நாளான இன்று இந்திய அணி 480 ரன்களை விரட்டி விளையாடி வருகிறது. பேட்டிங்கிற்கு சாதகமான களமாக இருந்தாலும் முதல் இன்னிங்ஸை இன்றைக்குள் முடித்துவிட்டு, அடுத்த 2 நாட்களுக்குள் 2 இன்னிங்ஸ்களை ஆடுவது சற்று கடினமான ஒன்று தான். எனினும் இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications