கட்டாக்: ஒடிஷாவில் கனமழை தொடர்ந்து நீடிப்பதால் கட்டாக்கில் இன்று நடைபெற இருந்த இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 5வது ஒருநாள் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெய்லி தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

7 ஒரு நாள் போட்டி தொடரில் முதல் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
2-வது போட்டியில் இந்தியா வென்றது. 4-வது போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. 4 போட்டிகள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

5-வது ஒரு நாள் போட்டி ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் இன்று நடைபெற இருந்தது. ஆனால் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.