பெங்களூரு : இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஐந்தாவது டி20 போட்டி பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது.
இதனை அடுத்து களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் ஜோடி ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினர். ஜெய்ஸ்வால் இரண்டு சிக்சர் ஒரு பவுண்டரி அடித்த நிலையில் 15 பந்துகளை எதிர் கொண்டு 21 ரன்கள் வெளியேறினார்.

ஆனால் இந்திய வீரர்கள் அபாரமாக பந்துவீசி ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆர்ஸ்தீப் சிங் அபாரமாக பந்துவீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது.