
கும்ப்ளேவின் கணிப்பு என்ன?
ஆஸ்திரேலியாவில் இந்தியா நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. தொடர் துவங்கும் முன் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களின் தொடர் வெற்றிக் கணிப்பை வெளியிட்டனர். அனில் கும்ப்ளே 2-1 என்ற கணக்கில் இந்தியா வெல்லும் என தெளிவாக கூறி இருந்தார்.

அப்படியே நடந்தது
அது இன்று அப்படியே நடந்துள்ளது. இந்தியா 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை முதன் முறையாக அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது. அனில் கும்ப்ளே எப்படி முன்பே சரியாக கணித்தார்?

மழை நிச்சயம் வரும்
அனில் கும்ப்ளே இந்த கணிப்பை கூறிய சமயத்திலேயே மற்றொரு தகவலையும் கூறினார். இந்த தொடரில் மழை குறுக்கீடால் எப்படியும் ஒரு போட்டியாவது டிரா ஆகும். அதனாலேயே 2-1 என நான்கு போட்டிகள் டெஸ்ட் முடிவு இருக்கும் என கூறி இருந்தார்.

அனுபவம் வாய்ந்தவர் கும்ப்ளே
அதன்படியே நான்காவது போட்டியில் மழை குறுக்கிட்டு போட்டி டிரா ஆனது. இந்தியா முதல் மற்றும் மூன்றாம் போட்டியிலும், ஆஸ்திரேலியா இரண்டாம் போட்டியிலும் வெற்றி பெற்றன. முன்னாள் இந்திய டெஸ்ட் அணி கேப்டன் அனில் கும்ப்ளே பெரும் அனுபவம் வாய்ந்தவர். அவரது கணிப்பு சரியாக அமைந்தது ஆச்சரியமே இல்லை.

பயிற்சியாளர் கும்ப்ளே?
ஆனால், இந்த சமயத்தில் அனில் கும்ப்ளே தான் இந்தியாவின் பயிற்சியாளராக இருந்திருக்க வேண்டும் என்பதும், ஆனால் அவருக்கு நடந்த மோசமான நிகழ்வுகளும் நம் கண் முன்னே வந்து போவதை தடுக்க முடியவில்லை.


Click it and Unblock the Notifications
