ஐபிஎல் ஓய்வு இல்லையா?
பும்ரா, புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட முக்கிய இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு ஐபிஎல் தொடரில் ஓய்வு அளிக்க வேண்டும் என கோலி முன்பு கூறியிருந்தார். இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கு முன்பு நடைபெறும் சர்வதேச தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு ஏன்?
இதன் மூலம் பும்ரா ஐபிஎல் தொடருக்காக ஓய்வில் இருக்கிறாரா? என சில ரசிகர்கள் கோபமாக கேட்டுள்ளனர். மார்ச் மாதம் இறுதியில் ஐபிஎல் துவங்குகிறது. அதன் பின் மே இறுதியில் உலகக்கோப்பை தொடர் துவங்க உள்ளது.
உலகக்கோப்பைக்கு முன்
உலகக்கோப்பைக்கு முன் இந்தியா கடைசியாக ஆடும் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து தொடர்கள் மட்டுமே. அனைத்து முன்னணி வீரர்களும் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து ஒருநாள் தொடர்களில் பங்கேற்பதன் மூலம் தங்களை கூர் தீட்டிக் கொள்ள முடியும்.
பும்ரா ஆடுவது அவசியம்
அதே நேரத்தில் நியூசிலாந்து அணி சமீப காலமாக அதிரடியாக ஆடி வருகிறது. அந்த அணியின் அனைத்து வீரர்களும் பார்மில் இருக்கிறார்கள். இந்த சூழலில் இந்திய அணியில் பும்ரா ஆடுவது அவசியம்.
ரசிகர்கள் கண்டிப்பு
பும்ராவுக்கு ஆஸ்திரேலிய தொடரில் ஓய்வு கொடுத்து விட்டு நியூசிலாந்து தொடரில் ஆட வைத்திருக்கலாம். ஆனால், அவருக்கு இரண்டு தொடர்களிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதை ரசிகர்கள் கடுமையாக கண்டித்து ட்வீட் போட்டு வருகிறார்கள். அவற்றில் சில -
|
உலகக்கோப்பையிலும் ஓய்வா?
ஐபிஎல் தொடரில் முழுமையாக ஆட பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை உலகக்கோப்பை தொடர் ஐபிஎல்-க்கு முன்னே வந்திருந்தால், அதிலும் அவருக்கு ஓய்வு கொடுத்திருப்பார்கள் என கிண்டல் அடித்துள்ளார்.
|
நிறைய கற்றுக் கொள்ளலாம்
ஆஸ்திரேலிய தொடரில் ஓய்வு பெறுவது சரி. ஆனால், நியூசிலாந்து சூழ்நிலையில் பும்ரா நிறைய கற்றுக் கொள்ளலாம். அவரே தனக்கு வாய்ப்பு வேண்டும் என கேட்க வேண்டும் என கூறியுள்ளார் இந்த ரசிகர்.
|
லாபம் தான் முக்கியம்
வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கணும்னா ஐபிஎல்-இல் கொடுக்கலாமே. ஆனால், நீங்கள் அதை செய்ய மாட்டீர்கள். உங்களுக்கு லாபம் தான் முக்கியம். பும்ராவுக்கு பதிலாக உங்கள் மனதிற்கு தான் ஓய்வு தேவை என சாடியுள்ளார்.
|
பும்ராவுக்கு எதற்காக ஓய்வு?
பும்ராவுக்கு ஓய்வு என்பது கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால், ஓய்வு ஐபிஎல்லுக்கா? உலகக்கோப்பைக்கா? என கேட்டுள்ளார்.
|
ரொம்ப நல்ல காரியம்
ரொம்ப நல்ல காரியம்.. மிகவும் முக்கியமான ஐபிஎல் தொடருக்கு அவரை தகுதியாக்கி வைங்க.. இந்தியா ஓடு தொடரை வெல்ல 50% வாய்ப்பை இழந்துள்ளது. குறிப்பாக நியூசிலாந்தில். அங்கே பவுண்டரி எல்லைகள் குறுகியதாக இருக்கும்.