பிட்ச் சரியில்லை
எப்படிப்பட்ட பிட்ச்சில் இந்திய வீரர்கள் விக்கெட் எடுத்து சாதித்துள்ளார்கள் என்பது பற்றி கவாஸ்கர் கூறுகையில், "அடிலெய்டு பிட்ச் பந்துவீச்சுக்கு பெரிய அளவில் உதவவில்லை. தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து பிட்ச்களில் கொஞ்சம் உதவிகள் கிடைத்தது. ஆனால், இந்த பிட்ச்சில் எந்த உதவியும் இல்லை. ஐந்தாம் நாள் கூட பேட்டிங் செய்ய ஏதுவாக இருந்தது, ஸ்பின்னர்களுக்கு ஒரு பிடிமானமும் கிடைக்கவில்லை" என தெரிவித்தார்.
இஷாந்த் சர்மா சூப்பர்
இரண்டு அணிகளிலும் பந்துவீச்சில் அதிக அழுத்தம் இருந்தது. இஷாந்த் சர்மா மிக அற்புதமாக பந்து வீசினார் என அவரை பாராட்டினார் கவாஸ்கர். இஷாந்த் சர்மா இந்த டெஸ்டில் சரியான அளவில் பந்து வீசினார். முதல் இன்னிங்க்ஸில் மூன்றாவது பந்தில் ஆரோன் பின்ச் விக்கெட்டை வீழ்த்தினார்.
எதிரணி டக் அவுட்
கடந்த 12 முதல் 18 மாதங்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களை டக்-அவுட் ஆகி அனுப்பும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறார்கள். கடந்த காலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் தெரிவித்தார் கவாஸ்கர்.
தொடர் வெற்றி கணிப்பு
இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 3-0 என வெல்லும் என கணித்துள்ளார் கவாஸ்கர். தற்போது முதல் டெஸ்டில் வென்றுள்ள இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இன்னும் நான்கு டெஸ்ட் போட்டிகள் உள்ளன. அதில் நிச்சயம் இரண்டு போட்டிகளில் இந்திய வெல்லும் என்கிறார் கவாஸ்கர்.