For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவுக்கு எதிரான 6வது ஒருநாள் போட்டி: 50 ஓவர் முடிவில் ஆஸி 350/6

By Mathi

நாக்பூர்: இந்தியாவுக்கு எதிரான 6வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 350 ரன்களைக் குவித்தது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்களில் 2-ல் ஆஸ்திரேலியாவும், ஒன்றில் இந்தியாவும் வெற்றி பெற்றன. அடுத்த இரு ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டன.

George Bailey

இத் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 6-வது ஒரு நாள் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோணி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது. முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா.

22வது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்களை எடுத்திருக்கிறது ஆஸ்திரேலியா அணி. 50ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 350 ரன்களைக் குவித்தது ஆஸ்திரேலியா அணி.

அந்த அணியில் பெய்லி 111 பந்துகளில் 154 ரன்களும், வாட்சன் 94 பந்துகளில் 102 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Story first published: Wednesday, October 30, 2013, 17:04 [IST]
Other articles published on Oct 30, 2013
English summary
Handicapped by the poor form of some of their key bowlers, India will be under intense pressure as they go into the do-or-die sixth cricket one-dayer against an upbeat Australia
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+