இஷாந்த் கோபம்.. ஏன்?
விராட் கோலி கூறுகையில், "இஷாந்த் சர்மா தன் மீதே கடும் கோபத்தில் இருக்கிறார். நங்கள் ஏன் என்று கேட்டோம். "ஒரு மூத்த வீரராக இருந்து கொண்டு இப்படி விக்கெட் கிடைத்த பந்துகளை நோ-பால்களாக வீசி இருக்கக்கூடாது" என்றார். இஷாந்த் சர்மா முதல் டெஸ்டில் நோ பால்கள் வீசிய மூன்று பந்துகள் விக்கெட் விழ வேண்டிய பந்துகள் ஆகும்.
பின்ச் விக்கெட் போச்சு
ஆஸ்திரேலிய பேட்டிங்கின் இரண்டாம் இன்னிங்க்ஸில் இஷாந்த் முதல் ஓவரை வீசினார். அதில் இரண்டாவது பந்தில் பின்ச்சுக்கு எல்,பி,டபுள்யூ முறையில் அவுட் கொடுக்கபட்டது. பின் ரிவ்யூ பார்த்ததில் அது நோ-பால் என தெரிய வந்தது. .
அடுத்து ஷான் மார்ஷ்
51வது ஓவரில் ஷான் மார்ஷ் பந்துவீச்சில் மீண்டும் ஒரு நோ-பாலில் விக்கெட் கிடைத்து வீணானது. ஆனால் இதோடு முடியவில்லை. இன்னும் ஒரு முறை இதே சம்பவம் தொடர்ந்தது.
கடைசியாக நாதன் லியோன்
கடைசி நேரத்தில் நாதன் லியோன் ஆஸ்திரேலிய அணியை தோல்வியில் இருந்து மீட்க போராடினார். அப்போது இஷாந்த் பந்து அவரது பேடில் பட்டது. அம்பயர் அவுட் என கை உயர்த்தப் போய் பின்னர் நோ-பால் என தெரிந்து நோ-பால் மட்டும் கொடுத்தார். அந்த பந்தும் விக்கெட் விழ வேண்டிய ஒன்றே என ரீ-ப்ளேவில் தெரிந்தது.
மற்ற பந்துவீச்சாளர்கள் அசத்தல்
மூத்த வீரரான இஷாந்த் சர்மா சொதப்பிய நிலையில், ஷமி, பும்ரா, அஸ்வின் ஆகியோர் இரண்டாம் இன்னிங்க்ஸில் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இஷாந்த் இந்த போட்டியில் மொத்தமாகவே 3 விக்கெட்கள் தான் எடுத்தார்.