ரன் குவிக்காத ராகுல்
டெஸ்டில் சரி வர ரன் குவிக்காத ராகுலுக்கு கிடைத்த அதிகப்படியான இந்த வாய்ப்பிலும் அவர் சொற்ப ரன்களுக்கு வெளியேறியது கடும் விமர்சனங்களை கிளப்பியது. கடந்த ஆண்டு முழுவதும் ராகுல் பங்கேற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பல முறை சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தார்.
செல்லப் பிள்ளை ராகுல்
அவரை அணியை விட்டு நீக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், அவர் செல்லப் பிள்ளையாக அணியில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ராகுல் சொதப்பி வரும் நிலையில், அவரை அடுத்து நடைபெற உள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தேர்வு செய்துள்ளனர்.
வாய்ப்புக்களை வீணடித்து வருகிறார்
ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் எதிர்ப்பை மீறி தனக்கு அளிக்கப்படும் வாய்ப்புக்களை ராகுல் வீணடித்து வருகிறார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 48 ரன்கள் மட்டுமே அடித்த அவர் மூன்றாம் டெஸ்டில் வாய்ப்பு பெறவில்லை.
9 ரன்களில் வெளியேறினார்
நான்காம் டெஸ்டில் ரோஹித் இடம் பெறாத நிலையில் அவரது இடத்தை பிடித்து துவக்க வீரராக களம் இறங்கினார் ராகுல். இந்த முறை 6 பந்துகள் மட்டுமே சந்தித்து 9 ரன்களில் வெளியேறினார். ஆட்டமிழந்த உடன் அவர் ஒரு மணி நேரம் வலை பயிற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
வாய்ப்பை இழக்க நேரிடும்
டெஸ்ட் தொடரில் இன்னும் அவருக்கு ஒரு இன்னிங்க்ஸ் ஆட்டம் மட்டுமே இறுதி வாய்ப்பாகும். ஒருவேளை ராகுல் அதில் பெரிய அளவில் ரன் குவிக்காவிட்டால் டெஸ்ட் அணியில் தன் வாய்ப்பை இழக்க நேரிடும்.
கடைசி நேரத்தில் தீவிர பயிற்சி
மேலும், ஒருநாள் தொடரிலும் வெளியே அமர வைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இதை மனதில் வைத்து அவர் இந்த உடனடி வலை பயிற்சியில் ஈடுபட்டு இருக்கலாம். ஆனால், கிடைத்த வாய்ப்பில் எல்லாம் சொதப்பி விட்டு, கடைசி நேரத்தில் தீவிரமாக பயிற்சி செய்து என்ன செய்வது?
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்ற பழமொழி போல தான் உள்ளது ராகுலின் இந்த செயல். எல்லோரும் பயிற்சி செய்து விட்டு விளையாடுவார்கள். ராகுல் மோசமாக விளையாடி விட்டு வந்து பயிற்சி செய்கிறார். என்னத்த சொல்ல?