சிட்னி : சிட்னியின் மழை சூழலில் டிரில் போன்ற ஒன்றை கொண்டு தன்னுடைய பயிற்சியை ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மேற்கொண்டார்.
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் 3 தொடர்கள் நடைபெறவுள்ள நிலையில், அவை அனைத்திலும் ஜடேஜா இடம்பெற்றுள்ளார்.
கடந்த ஐபிஎல் 2020 தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளையும் 232 ரன்களையும் அவர் அடித்துள்ளார்.

ஐபிஎல் 2020 தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி ரவீந்திர ஜடேஜா, 14 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இதேபோல 232 ரன்களை அவர் எடுத்துள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 3 தொடர்களிலும் அவர் இடம்பெற்றுள்ளார். தற்போது சிட்னியில் குவாரன்டைன் மற்றும் பயிற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ள நிலையில், அந்த தொடர்களுக்காக ஜடேஜா தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் டிரில் போன்ற ஒன்றை வைத்து அவர் தனது வார்ம் அப் பயிற்சிகளை மேற்கொண்டார். அந்த வீடியோவை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.