ஒருநாள் அணியில் இடம் இல்லை
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் போட்டிகள் அணி கடந்த சில நாட்கள் முன்பு அறிவிக்கப்பட்டது. அதில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் பெயர்கள் இடம் பெற்று இருந்தது. ரிஷப் பண்ட் ஒருநாள் அணியில் வாய்ப்பு பெறவில்லை.
உள்ளூர் அணியில் ரிஷப்
ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் டிம் பெய்ன் கீப்பிங் செய்து கொண்டு இருந்த போது பேட்டிங் செய்த ரிஷப் பண்ட்டிடம், "தோனி மறுபடியும் ஒருநாள் அணியில் வந்துட்டார். நீ ஹர்ரிகேன் (ஆஸ்திரேலிய உள்ளூர் டி20 அணி) அணிக்கு ஆடுறியா?" என கலாய்த்தார்.
வீடு ரெடி பண்ணுங்க
ஒருநாள் அணியில் இல்லாததால், ரிஷப் ஓய்வில் இருப்பார் என்பதை வைத்தும் கேலி செய்தார் டிம். "ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரத்தில் ஓய்வை கழிக்கலாமே.. இவருக்கு ஒரு வீடு ரெடி பண்ணுங்க" என கேலி செய்தார்.
குழந்தைகளை பாத்துக்கிறியா?
மேலே கூறிய எல்லாவற்றையும் விட மோசமான கலாய்த்தல் ஒன்றை செய்தார் டிம் பெய்ன். "ஓய்வு நேரத்தில் என் குழந்தைகளை பாத்துக்கிறியா? நானும், என் மனைவியும் சினிமாவுக்கு போய்ட்டு வருவோம்" என கூறி மரண கலாய் கலாய்த்தார் ஆஸ்திரேலிய கேப்டன்.
அனுபவிக்கும் ரிஷப் பண்ட்
முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும் என்பது போல ரிஷப் பண்ட் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்களை இதே போல இம்சை செய்ததற்கு, சேர்த்து வைத்து இப்போது அனுபவித்து வருகிறார்.
கலாய்க்கும் டிம் பெய்ன்
ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், இரண்டாம் போட்டியில் கோலியின் சீண்டலுக்கு பதிலடி கொடுத்தார். மூன்றாம் டெஸ்டில் அவரே களம் இறங்கி ரோஹித், ரிஷப் பண்ட் போன்றோரை கலாய்த்து வருகிறார்.