முதல் நாள் முடிவில் பும்ரா
இரண்டாம் டெஸ்டின் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்து இருந்தது. முதல் நாளின் கடைசி சில ஓவர்களில் பும்ரா களத்தில் நின்று இருந்த ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன்-ஐ அச்சுறுத்தும் வகையில் பந்து வீசினார்.
இரண்டாம் நாள் துவக்கம்
இரண்டாம் நாள் துவக்கத்தில் பும்ராவை தான் கோலி பந்துவீச அழைப்பார். அதன் மூலம் டிம் பெய்ன்-க்கு அழுத்தம் கொடுக்கலாம் என எதிர்பார்த்த நிலையில், இஷாந்த் சர்மா மற்றும் முஹம்மது ஷமி பந்துவீசத் துவங்கினர்.
விளாசிய கவாஸ்கர்
இதைக் கண்டு அதிர்ச்சியான கவாஸ்கர் கோலியை விளாசியுள்ளார். பும்ரா முதல் நாள் ஒரு வீரரை அச்சுறுத்தும் வகையில் பந்து வீசியுள்ளார். அடுத்த நாளும் அவரிடம் பந்தை கொடுக்க வேண்டியது தானே? என கேள்வி எழுப்பியுள்ளார்.
கிளார்க் கருத்தும் இதே தான்
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிளார்க் கூறுகையில் இந்த போட்டியின் சூழ்நிலையை வைத்துப் பார்த்தால் பும்ராவிடம் தான் பந்தை கொடுத்திருக்க வேண்டும் என்றார். அதே போல, பும்ரா தான் டிம் பெய்ன் விக்கெட்டை எடுத்தார்.
கோலி கோட்டை விட்டுட்டார்
10வது ஓவரில் தான் பும்ரா பந்து வீச வாய்ப்பு கிடைத்தது. ஒருவேளை கோலி பும்ராவை துவக்கத்தில் பந்து வீச அழைத்து இருந்தால், டிம் பெய்ன், கம்மின்ஸ் ரன் குவிக்க திணறி இருப்பார்கள். இந்தியா 20-30 ரன்களை கட்டுப்படுத்தி இருக்கலாம்.