இந்திய அணியில் இடம்
ராகுல் - பண்டியா இருவரும் பெண்கள் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சைக்குரிய முறையில் பேசியதாக எழுந்த புகாரில் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஷுப்மன் கில் - விஜய் ஷங்கர் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டனர்.
நியூசிலாந்து தொடரில் ஷுப்மன்
விஜய் ஷங்கர் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இருந்தே அணியில் இடம் பெற உள்ளார். ஷுப்மன் கில் நியூசிலாந்து தொடரில் இருந்து மட்டுமே இந்திய அணியில் இணைய உள்ளார். கடந்த ஆண்டு இந்தியா ஏ அணிக்காக நியூசிலாந்தில் ஆடியிருந்தார் ஷுப்மன்.
அண்டர் 19 அசத்தல்
ஷுப்மன் கில் அண்டர் 19 உலகக்கோப்பையில் ப்ரித்வி ஷா தலைமையில் ஆடியவர். அந்த தொடரில் 372 ரன்கள் அடித்தார் கில். அதன் சராசரி 124 ஆகும். அப்போதிருந்தே ஷுப்மன் கில் மீது எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
சக வீரர்கள் ப்ரித்வி, ஷிவம்
ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில் மற்றும் ஷிவம் மாவி ஆகிய மூன்று அண்டர் 19 உலகக்கோப்பை அணி வீரர்களும் இந்திய அணியில் விரைவில் இடம் பிடிப்பார்கள் என்ற பேச்சு அடிபட்டு வந்தது. இவர்களில் ப்ரித்வி ஷா டெஸ்ட் அணியிலும், ஷிவம் மாவி ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கும் ஏலம் போனார்.
மாயன்க் அகர்வாலின் வாய்ப்பு
ஷுப்மன் கில் ஐபிஎல் அணிகளில் இடம் பெற்று இருந்தார். தற்போது, இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்து அசத்தியுள்ளார். டெஸ்ட் அணியில் துவக்க வீரராக இடம் பெற்று இருந்த மாயன்க் அகர்வால், ராகுல் - பண்டியா நீக்கத்திற்கு பின் ஒருநாள் அணியிலும் தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவருக்கு காயம் இருந்ததால், ஷுப்மன் கில் வாய்ப்பு பெற்றார்.